சாமான்யன்
Friday, February 27, 2004
 
தேவையா?

உளறல்கள் கூட சில
நேரங்களில் ரணப்படுத்தும்
உண்மையை நான் மட்டும் அறிந்த போது
என் உளறலின் உள்ளர்த்தம் அனர்த்தமானால்....

சுமை இறக்கு,
கூலி தேவையில்லை
என்றழைத்தான் நண்பன்
பகிர்ந்தால் பரவசம், வலி குறையும், காயம் ஆறும்
உண்மை

ஆனால் முப்பத்துமூன்று வருடமாய்
பழகிப்போனதே...
என்னுள்ளேயே உணர்ந்து, உயிர்த்து, வலித்து,
அழுது, ருசித்து, சிரித்து, பழித்து, விழித்து,
புணர்ந்து, வெட்கி....
இன்னும் எவ்வளவோ..

Powered by Blogger